×

8, 9, 10, 11 ஆகிய மண்டலங்களில் வரும் 17, 18ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, நவ.15: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட அறிக்கை: கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ளதா,ல் சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே, வரும் 17ம் தேதி அன்று காலை 7 மணி முதல் 18ம் தேதி மாலை 7 மணி வரை, மண்டலம்-8 (அண்ணா நகர்), மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-11 (வளசரவாக்கம்) ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி, தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், தி.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, சின்மயா நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, ரங்கராஜபுரம், தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், சி.ஐ.டி.நகர், வளசரவாக்கம் மண்டலத்தில் தாய்சா அடுக்குமாடி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post 8, 9, 10, 11 ஆகிய மண்டலங்களில் வரும் 17, 18ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Drinking Water Supply and Sewerage Board ,Koyambedu Kaliamman Koil Street ,
× RELATED சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்...